உலகத்தின் இயல்பு

எப்போதும்  
இங்கிது போல் 
நடந்ததில்லை என்போம் 

மனத் துக்கம் தாழா
துயரத்தில் நிற்போம்

இதுதான் நான் கண்ட 
துயரத்திலும், துயரம்
பெருந்துயரம் என்போம்

#இது விபத்து நடக்குமிடம், 

நிமிடத்திற்கு ஒருமுறை
அலறி வரும் ஊர்தி 

அதில்
பதறிய மனதோடும் 
உதறிய கை யோடும்
உருக்குலைந்து வந்தால்

மருத்துவமனையில், 
பத்தில் நாம் ஒன்றெனத் தோன்றும்

#இதுதான்
உலகத்தில் மானுடர் துன்பமும் ,
சந்திக்கும் இன்னலும் 

#தன்னை மட்டும் பார்த்தால் 
துயரத்தின் உச்சம்

பரந்துபட்டு பார்த்தால் ...

பார்த்ததில்
நாம், 
மிச்சத்தில் மிச்சம் ..

செருவாவிடுதி,
சி.செ

Comments

Popular posts from this blog

சித்திரம் பேசுதடிக் கண்ணமா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .