Posts

Showing posts from September, 2021

261- வது கவியரங்கம்

என் நாசிக்காற்று  மூச்சிறைக்கும் வரை என் நேசத்தாயே  தமிழே உனை வணங்கித் தொழுவேன்  நிதமே... வளமானத் தமிழுக்கும் வற்றாத வளமைக்கும் முற்றம் தந்து மூவாத தமிழை மொழிகளின் தாயை ஆதார மொழியை அலங்காரச் சுவையை முக்கனிச் சாராய் பருகத் தரும்  சான்றோர் நிறைந்த நிலாமுற்றமே  நீயே என்யென்  முத்தமிழ் மன்றமே உமை  வணங்கித் தொடங்குவேன்  என்றுமே....

கொரோனாவின் வெற்றி...

நிலாமுற்றத்தின்  261 - வது  கவியரங்கம் கொரோனாவின் வெற்றி  என்ற வினாவின் விடைக்கு  விருத்தக் கவிதை  ஆயிரம் படைத்து - எமக்கு இனிய தமிழ்ச் சொல் விருந்து கொடுத்து  புரியாதச் சில புதிருக்கும் பலமானச் சில கேள்விக்கும் வளமானத் தமிழ்த் தரக்கண்டு வடிவானப் பண் சேர்த்துண்டு நான் மகிழ்வானேன் கவிமகிழ் வானே... உம்மால் நான்,  மகிழ்வானேன்  கொடுத்தத் தலைப்பில் எடுத்துத் தொடுத்தக்  கவி ஆயிரமும்  பூத்துக் குலுங்கும் பூவண்டாடும் சோலை தேனொழுகும் பாயிரமன்று  அது அஞ்சாப்போர் மறவன் கையிருக்கும் வஜ்சிராயுதமே நெஞ்சம் நிறைந்தேன் கவி கொஞ்சமாயினும் அதை அருந்தேன் அது அரும் தேன் நேற்றோடு நின்றும் என்றும் குடித்தேன்  படித்தேன்  கவிதை ஒவ்வொன்றும் படி தேன் ஓலை குடிசையில் ஒடியாடவும் இடம் இல்லாதப் போதிலும்  அன்று இன்பம் இல்லாமலில்லை இன்று ஆலை கரும்பெனக்  ஆளை வருத்தும் உடல்நோவை கொடுக்கும்  வேலை பளுவிலும் வரும் வேர்வை குளியலும் ஊதியம் தராது  உள்ளம் உறங்கவும் செய்யாது பிள்ளை பசியினின் மனம் கொள்ளை போகும்  அந்த அழுகை செலுத்தும் என் இறுதி பயணம் கொரோனாவின் கோரப்பிடியில் ஒரு வேலையில்லை நான் வாழ்வதிலும்  இனி வேலையில்லை  கொடும்பசி

பெண் கல்வி

இந்த வார்த்தையை ஏளனம் என்று  எண்ணிய எத்தர்கள் -  இன்று  ஏட்டிலும் இல்லாமல்  இடுகாட்டிலும் இல்லாமல் எங்கோ... போயினர் போயினர் பொடிகூட மிஞ்சாமல் காற்றோடு கலந்து  காணாமல் போயினர் கல்வி அது  காலத்தால் அழியாத காவியத் தலைவி ஆயிரம் செல்வங்கள்  அடிபோட்டு நின்றாலும்  கள்வனும் கொள்ளை  கொண்டிட முடியா  கற்பனைக் கெட்டா  அற்புத சுரபி அது  அம்மையின் சொல்லில் வாய்மொழி பேச்சில் அழகாய் தொடங்கிய  முற்கண் கல்வி அவ்வழி,  ஆளான பின்னும்  முடிவில்லா கல்வி நாளைய சந்ததி  நலம்பெறும் கல்வி அதுதான் நல்லோர் போற்றிடும் பெண்களின் கல்வி.... இன்று  ஆயிரமாயிரம் தடைகளை பெருங்கடல் அலைகளை கடந்து வருவதே  பெரும்பாடு கொண்டோம்  அதிலும்  அடுக்குகள் பலவாய் பதினாயிரம் கொடுத்து  வடிகட்டி  வடிகட்டி எங்களை  வாட்டி வதைப்பதே வாடிக்கையானது  அதில் நீட்டும் கொஞ்சம்  கைகொட்டி சிரிக்குது எல்லாம்,  விதி செய்யும்  சதி என்றோ இல்லை,  மதிசெய்த விதியென்றோ கடந்திட நினைத்தால்  சாமத்தில் திரியும்  காமச் சண்டாளன்  கொடுமையும் திண்டாடச் செய்யுது இதிலெங்கள்  பெண்கல்வியும்  தள்ளாடி நிற்குது இந்நிலை இல்லாது போக்கிட...! பெண்ணினம் நலமோடு காத்திட.... ஒரு துப

முகவரி

இருளுக்கும் எனக்கும் இருக்கும் இறுக்கம் ஒரு பாறைக்குள்  அடைபட்டத் தேரையின் நிலையிருக்கும் உண்டது கூட உண்டியில் கிடக்க மறுக்கும் - விழி  கண்டதும் கூட கனத்தப் பெரும் இருளாயிருக்கும் ஆயிரம் வண்ணம் பூசினாலும் அன்றைய இருள்மட்டும்  இருளாகவே இருக்கும் இதயம் கூட இடிப்பதை இன்னும் அதிகப் படுத்தும் காலை உதயம் கூட எனக்கு உருமாறியேத் தொலைக்கும் என் உள்ளம் அறிந்து ஓருயிர் பலிகூட செய்தறியேன் ஏற்றப் பணியில் இதை எங்ஙனம் மறுப்பதறிவேன் கொடியில் காய்ந்திடும் துணியைப்போல் உயிரை வதைப்பது சரியோ தூக்கு விதிக்கப்பட்டோரை தூக்கிலிடும் தொழிலாளி என்னால் எத்தனை உயிர்  தன்னிலை மாறி  அந்தரத் தொங்கியிருக்குமோ அன்று என்னையும் ஒருமுறை தூக்கிலிட்டுதான் சென்றது இருவிழியின் இறுதிப்பார்வை உண்மையில் உனக்குமா உண்மை புரியவில்லை என்றவன் விழியின் மொழி கண்டபோதுதான் செய்யும் குற்றத்தின்  பாரம் மொத்தமும் என் தலைக்கேறி கனத்ததும் உண்மையில் அன்று  கருப்பு கவசமிட்டது அவன் முகத்திற்கு மட்டுமல்ல உண்மையை தேடியும்  கிடைத்தறிய முடியா  அந்த உண்மை முகவரிக்கும் தான் செந்தில் சுலோ

எப்பொழுதும் சாதிக்கலாம்

வீழ்ந்தோம் என்று  வருந்தம் கொள்ளாதே வீழ்ந்ததாலேயே விரட்சமானது விதைகள் என்பதை தெரிந்துகொள்

இருமுனையி_லிருக்கும்_நினைப்பு...

உறவும் நட்பும் தொலைவில்  இருக்கும் போதுதான் தேயாதய உரிமை பேணுகிறது,  நெடுவானி லிருக்கும்  மின்னலின் ரசிப்பில்... தொலைவு கொஞ்சம்  குறுகினால்,  உரிமையும்  அன்பும்  குறையின்றி  குறைந்தே போகிறது இது  இயற்கையா...?  இல்லை  இறுமாப்பா...?  என்பதறியாது  நிற்குகின்றேன் நான்,  நிர்கதியாய்...!! சி.செ

அம்மா..

வறுமையோடு நாமயிருக்க வரம் வாங்கி வந்தோமா  நம்ம கூட சேர்ந்திருக்க வறுமை வரம் வாங்கி வந்துச்சோமா தகப்பன்னு சொல்லுவே சக மனுசனாவும் நின்னதில்லை குடும்பத் தலைவன்னு  சொல்லுவே படியரிசியும் வாங்கி தந்ததில்லை எப்போவாச்சும் வருவாரு என்னையும் ரெண்டு அடிப்பாறு அடிதாங்க மாட்டாமெ நானோடி போயிருவேன் வெகுநேரம் சென்டு வந்தா! தலைவிரி கோலத்தோடு அழுது பொலம்புற நீ... பொறந்த ஒண்ணையும் கரைசேர்க வழியில்ல இப்பவந்து  அடிபோட்டு போரானே அடுத்ததெ நான்  என்னசெய்வேன்..ன்னு  சொல்லி கதறியழுவே நானும்  உருண்ட பாத்திரமும் ஒடஞ்ச மண்கொடமும் ஒழுங்கு பண்ணி வைக்கிறேன்.. ஒடஞ்ச உம்மனசெ  தேத்த வழியில்லாமல்.... கடுதாசி பொறுக்கி வந்து கதை கதையா சொல்லிவைப்பே காலமிது காலம்  பொல்லாத காலமுன்னு அது சொல்லாமல் கொல்லுமுன்னு அப்பப்போ சொல்லிவைப்பே அதை சொல்லும்போதும் நீ சொல்லமா கண்ணீரும் தொடச்சி வைப்பே அம்மா நீ கல்லொடைக்கும் போதுகூட - என்னை கண்கலங்க விட்டதில்ல என்னையள்ளி முலையூட்டும் போதுகூட முடங்கி நீ கிடந்ததில்ல  பசிகூட உன்னை விட்டு  போக மனமில்லாமத்தான் பலநாளா நிக்குதேன்னு... உனக்கு சோறாக்க நினைச்சு  இருந்த அரிசியெல்லாம் எடுத்து போடுறேன்...

வடுகப்பட்டியே . . .

கற்பனை சிறகின் கம்பனைக் கண்டதில்லை காவியம் போற்றிடும் இளங்கோவனை கண்டதில்லை கல்லா மாந்தரிலும் வில்லாய் சிந்தையூற்றும் வடுகப்பட்டி வாசனே தமிழ் கவிபாடும் நேசனே நான் கண்ட கம்பனும் இளங்கோவனும் நீயே வடுகப்பட்டியே...  இலக்கணம் அறியாப் பாட்டாளிக்கும் இலக்கிய சொலவடைப் புகட்டியவன் நீ பாடும் பாட்டில், பரவிக்கிடந்த மூடத்தையோட்டியவன் தாய்பாசத்தின் பனிக்கொடியை பற்றோடு காட்டியவன் வழக்கொழிந்த வார்த்தைக்கும் வாக்கப்பட வைத்தவன் நெறியோடு நடைபோடும் நதிபோல் தமிழில்  அறம்பாடி குணம்பாடி அகத்தினை நிறைத்தாய் வடுகப்பட்டி வளர்த்தாய் காதல் ரசம் கொட்டவும் யுத்தயிடி முளக்கமும் உன் வார்த்தையினூடே வீரத்தை விதைத்தாய் இறை பக்தியில் இழையோடிய கூட்டத்தின் மத்தியில் " ஊரையெல்லாம் காப்பாத்தும் தாண்டவக்கோனே முதலில் உண்டியலை காப்பாத்து  தாண்டவக்கோனே "  என்றே பக்தியோடு பகுத்தறிவையும் புகட்டியோன் நீ இன்றுபோல் அன்றொருநாள் இந்நிலமும் அன்னைத்தமிழும் உந்தன் தாய்வழி கண்டநாள் தமிழ்ச் சுவையூரக் கண்டநாள் அருந்தமிழே கருநிலவே உன் படைப்பில் பலவும் சுவை கண்டேன், அது தேன்சுளை இன்னும்  மிகுதியாய் வாசிக்கத் தமிழ் வேண்டும் ஆதலால் தமி

பெரியார்

நேற்று வரை உருவில்லா தொன்றை உலகம் உண்மை யென்று நம்பியபோது அதை, இல்லை என்று அறுதிட்டு கூறியவர் - நெஞ்சில் உறுதிபடக் கூறியவர் பழைமை வாதியின்  புகழ் வாக்கின் - பொய்மையை புதுமை நோக்கினூடே புரிவை கொடுத்தவர் அடுத்தவர் உரிமைக்கு உயிர் கொடுத்தவர் அடுத்தவர் வாழ்க்கைக்கும் தோள் கொடுத்தவர் அடிமை தனத்தை மட்டும் துணிந்து எதிர்த்தார்  அவர்... ஓர் தலைகீழ் மாற்றத்தின் புரட்சியாளன் தெற்காசியாவின்  சாக்ரடீஸ் எங்கள் தந்தை பெரியாரின் பிறந்த தினம் இன்று இது,  மானுடம் மகத்துவம் உணர்ந்த தினம் என்பேன் வர்ண பேதத்தையும் தீண்டாமை தனத்தையும் வேரறுத்தத் தினமென்பேன் இது நீதியின் பிறந்த தினம் பெரியாரின் பிறந்ததினம் வாழ்க அவர் புகழ் வாழ்க புரட்சி தீ செருவாவிடுதி : சி.செ

புறப்படு நீ

வில் நின்று  புறப்படும் அம்பு  காற்றோடு கை குலுக்கி கன்னல் மொழிபேசி இலையோடு நிழலாடும் கிளையோடு உறவாடி வந்ததை  மறந்து  செல்லும் வேலையும் துறந்து நாளை  இலக்கை அடைவோம் என்று இருந்திடக் கூடுமா... இருந்தால் அதுவும் வில்லின்  குணத்தில் சேருமா...?

நன்றி

நடை பழகிய நாட்கள் -  நளினத்தில்,  நா பழகிய பாக்கள் அதென் சோகத்தின் உள்ளத்தோடு இரும் சோம்பல் முறிக்கும் முயற்சி... என்னிலையோடு  உள்ளம் ஒப்பிடும் உறவை,  அவர்  உயர்ந்தது அறியாது. எப்போதும் நான் மௌனத்தின் சாயல் தானன்றி  கேள்விக்கு பதிலுரையா... ஊமையல்ல,  நீதியுரைய நீதிமானுமல்ல நான். சில நேரம் தடுமாற்றமும் பல நேரம் தடுமாற்றதை அவர்க்கு உணர்த்துவதும் உண்டு இருந்தும்  அவர் உணராத விடயம் விடமாகும் என்னில் ஆதலால்  விடையும் பெற்றேன் விடை பெற்ற என்னிடம் குறைகேட்போ குசலம் வினவலோ கூடாது ஒருபோதும் ஏனென்றால்  வினவும் வார்த்தையும் நானுயர ஏணியாக கூடுமே... என்பது அறியாரோ அறிந்தவர்க்கு  நன்றி செருவாவிடுதி : சி.செ

ஒரு சம்மதம் சொல்வாயா . . .

வருடம் தோரும் உன் வரவை என் வீட்டு வாசலில் நின்று எதிர்பார்ப்பேன் சிறு புன்னகை வேண்டி தவமிருப்பேன் நிமிராத நடையோடு நிழல் கூட குலுங்காது நீ போகும் அழகை பார்த்திருப்பேன்  என் கண்ணொளி  மங்கும்வரை காத்திருப்பேன் கோதையே  என் தேவதையே குழாய் நீர் பிடிக்க குழுமியோர் சண்டையிட குயில்போல், நீ இருக்குமிடம் தெரியாது உன் சிலம்பொலியும் சிரிக்காது உன் குரல் கேட்க  தவமிருப்பேன் தினமும் நான்  தவித்திருப்பேன் நினைவு கொண்ட நாள்முதல் நினையெண்ணும் உள்ளத்துள் நித்தமும் போராட்டம்  உனக்கு நரைவிழுந்த பின்னும் நரைக்க வில்லை  என் காதல் பூந்தோட்டம் உங்கூட்டு பெண்களெல்லாம் புது வாழ்வு கொண்டபோதும் எது காரணம் கொண்டோ கரம் நீட்ட மறுக்கின்றாய் மணம் முடிக்க வெறுக்கின்றாய் பள்ளி பருவத்திலும் - நீ தள்ளியே தானிருப்பாய் பேச்சு வரவில்லையே என்று கல்வியாசான் குமுறியபோது பரிதாபம் வேண்டாமென்று பதரி நீயழுததும் பாவி நெஞ்சில்  பதிந்தத் தடம் மாறவில்லை உனை எண்ணிய நெஞ்சுள் ஏக்கம் தாழவில்லை என்னவளே இப்போதேனும் ஒரு ஆக்ஞை செய் பிரக்ஞை அற்ற என்நெஞ்சை பிழைக்கச் செய் நீர் நிறைத்த குடத்தோடு என் வீட்டு  திண்ணைவரை ஒதுங்கச் செய்த இயற்கைக்கோர் நன்

சொல்லாடல்

வையம் ஆண்ட வண்ணத் தமிழே வாகை சூடிய காந்தக் குரலே உந்தன் சொல்லோடு சேந்தன்று சொக்கித்தான் போனது தமிழர் நெஞ்சம் நீர் சொல்லாது போனதால் இன்று சோகத்தனலில் தமிழகம் எங்கும் உந்தன் கவிதை தேனுண்ட தமிழர் நெஞ்செல்லாம் மலர் கள்ளுண்ட வண்டெனவும் உந்தன் பகுத்தறிவு பாலுண்டதால் தம்பிகள் நெஞ்செல்லாம் சுயமரியாதை வேல்கொண்டு நிற்குது காணீர் திண்டாடி திண்டாடி  உளம் பந்தாடிபோன  பாட்டாளி நெஞ்சில் உந்தன் சொல்லாட்சி ஒன்றால் சோறுடைத்து நின்றாய் அண்ணாவின் இதயத்தை இரவலாய் வாங்கியது கொடுக்க வருகிறேன் என்றதை சொல்லி வாய்விட்டு அழுது புலம்பியது உன்புகழ் ஊர்வலத்தில் மக்கள்  மனிதனாய் பிறப்பெடுத்த புனிதனே அவதாரமாய் அவதரித்தத் தலைவனே - நீ மண்ணகம் துயில் உறங்கினாலும் உன் செயலெதும் உறங்காது செய்து உலவினாய் பக்தியெனும் மாயபித்தில் பராசக்தியெனும் வேப்பிலையடிது அன்று ஏய் பூசாரி  அம்பாள் எப்போதடா பேசினாள் என்றே புரையோடிய மூடத்தில் நரையோடிய மூத்தோனாய்  சிறு வயதிலும்  கொடும் புல்லுருவிகளை புறமுதுகிட்டு ஓடிடச் செய்ததும்  உன் சொல்லாட்சி  பகுத்தறிவு பகலவன் வாக்கும் அன்பிற்கினிய  அண்ணாவின் மூச்சும் உன் பேச்சோடு  கலந்து என்றென்றும் தமி

மாத்தியோசி

நாளை என்பது வெறும் கனவென்றால்... சேமிப்பு எதற்கு ?  உன் சிந்தையை திரட்டு !! சி.செ

நூலகம்

சத்தமின்றி யுத்தம் பயிற்றுவிக்கும் போர்க்களம் சி.செ

போகும் பாதை

போகும் இடமும், வழித் தடமும் தெரிந்துவிட்டால் பயணிக்கும் தூரமும்,  தூரமில்லை... சி.செ

உறவு. . . .

அவசர கதியில் நெடும் பயணத்தில் நீ  அலையாடும் கடலில்  அலை குதித்தாடும் கயல்போல்   பேருந்தில்,  ஒரோரத்தில் நீயும்...   கரிசனத்தோடு நடத்துநரும்  பயணச்சீட்டை நீட்டுவார்    அவதியில்லாமல் தொடங்கி  அவதியில் முடிப்பாய்    நாற்புறமும் தொட்டுப்பார்த்து  பதறும் விழியோடு  பாவமாய் பார்வை வீசுவாய்   புழுவென்று கருதி  தூண்டில் முள்கடித்த மீன்போல்   உன்நிலையறிந்தோர் உள்ளம் உன்னை திட்டுவதா  இல்லை,    வண்டியை நிறுத்துவதா  என்ற கோப பார்வையோடு அவரும்   பயணச்சீட்டை உன் கையகம்  திணித்துச் செல்வார் . . .    பேரிடி விழுந்தது அது கனவில் என்பதுபோல் . . .  உன் பரிதவிப்பும்  பாதியாய் குறையும்    உன் கண்கள் இருண்ட நிலை தெளியும்   தூரத்து உறவில்  விட்டுப்போனவரில்   ஒரு முகச் சாயலில் தெரியுவார்   நடத்துநரும்   உள்ளத்தின்  உள் ஆழத்திலிருந்து  மூச்சுவிடுவாய்  இந்த புது உறவை எண்ணி . .  . சி.செ

நிதானம்

உடல்கொண்ட உயிர் இடம் விட்டுப் பிரிகையில் உறவென்றாலும் உற்ற நட்பென்றாலும் உள்ளம் துடி துடித்தழுகிறது... தூரமோ பெருந் துயரமும் நெஞ்சுருகும் ஓர் செய்தியும் அஞ்சாத வேள்வியாய் வந்து நெஞ்சை, இயல்போடு இம்சிக்கும்... இயற்கையும் என்ன பஞ்சம் ...! அதுவும் சிலநேரம் பேரிடி மின்னலை நெஞ்சில்  சிறு துறும்பென்றே இறக்கும்  ...!! செய்யும் பாட்டில் பிழையென்றால் திருத்தம் செய்யலாம் கொண்ட வாழ்வில் பிறழ்வென்றால் திரும்ப முடியுமா திரும்பவும் யோசிப்போம் நிதானம் அதை சுவாசிப்போம் சி.செ

பருவம் என்பது

பருவம் என்பது பயிர் செய்யும் இடமல்ல- அது பக்குவத்தின் பிறப்பிடம்

போர்க்களம்

போர்க் களம்  என்பது வாழ்க்கை  என்றால் ஆயுதம்  என்பது  அன்பு  மட்டுமே.... அங்கே வம்புகள்  ஒருபோதும் வாகை சூடுவதில்லை....

நாளை என்பதும்

ஓய்விடம் அசைபோடு மாக்களைப்போல் கடந்த நாட்களில்  நடந்துபார் நாளை என்பதும்  புனிதமாகும்

வேப்பந்தோப்பு குயிலே

வாடை காலத்தில் ஆடி கோடையில் வாடும்  இலையல்ல வாழ்க்கை வாழ்க்கை என்பது வேடிக்கை பொருளா ? சோம பாணத்தில் வார்த்தை வாள்வீசி போவதிங்கு வீரத்தின் மருளா அந்தியில் திரும்பும் அன்றிலும் பருந்தும்  அமைதியாய் போவது  அச்சத்தின் பொருளா உண்ட மிச்சத்தில் கொஞ்சம் கூட்டினுள் ஊட்டிட வேண்டி அலகிடை சுமக்கும்  அதையெண்ணு மனிதா கடினத்திலும் கடினம் உன்னுழைப்பு அறிவேன் உன் உடலுலைத் தலுப்பு மாற கள்ளுண்டு நீயும்  கால் தட்டி இடறி இடைகட்டு மறந்து பொடி தட்டி போவாய் நீ சிறுக சிறுக சேர்த்து வைத்த  மானத்தோடு சேர்ந்து  மதிமயங்கிப் போவாய் பிடிவிட்ட கொடியாய்  திசைகெட்டு போவாய் பசிக்கு மருந்தில்லாது ருசிக்கும் வழியில்லாது படுத்துறங்கும் பாயில் உன் முகவரி சொல்லும் நீன்பெற்றப் பிஞ்சு குழவிகள் தெருவில் வேப்பந்தோப்பு குயிலே - உன் வேலை இதுவல்லத் தளிரே சாலையில் உறங்கும் தளிரும் கல்விச் சாலையில் பயிலும் அதுவுன் தெளிவில்தான் அட ஆலயம் இருக்கும் பொருளும் உன் சிந்தயில் சிவமாய் தெளியும் அந்திமாலை வந்ததும் மயக்கும் இது மதுவல்ல... உந்தன் மைவிழியாள் மனத்தால் தந்திடும் சொர்க்கம் மதுமட்டுமா இனிக்கும் வேப்பந்தோப்பு குயிலே,  வேம்பம் பூவிலும்

அருக்காணி பாட்டியின் கடை..

அது புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி வழிசெல்லும் நெடுஞ்சாலை. புதுக்கோட்டையில் இருந்து சரியாக 12 வது மையில்கல் தொலைவில். ஒரு சோலைவனம் போல் காட்சி தரும், அந்த அழகான மரங்கள் கூடியிருக்கும் இடத்தில்,  எப்போதும் ஏதேனும் ஒரு பழவகையை ,  அது வாழையோ , கொய்யாவோ நாவற்பழமோ வைத்துக் கொண்டு,  விற்பனை செய்து கொண்டிருக்கும் அந்த 70 வயது மூதாட்டி. பேரு அருக்காணி  இப்போதெல்லாம் அந்த சாலையை கடந்து செல்வோரில் சிலர் அங்கே வாகனத்தை நிறுத்தி பழங்கள் வாங்கிச் செல்வது வாடிக்கையாகி விட்டது. வாடிக்கையாளரின் அதிகரிப்பால் அருக்காணி பாட்டி ஒருநாள் கூட, கடை வைக்காமல் நிறுத்தியது இல்லை. காரணம் நம்மை நம்பிவருபவர்கள் ஏமாறக் கூடாது என்ற கடமை உணர்வுதான். அதை தொழில் நேர்த்தி என்றும் சொல்லும் பாட்டி.  ஒரு நாள் பாட்டி கடை நடத்திக் கொண்டிருக்கும் போது அந்த வழியே பள்ளிக்கூடம் போகும் பவுனுத்தாயி சிரித்த முகத்தோடு வந்தாள். வந்தவள் பத்துரூபாய் பணத்தை பாட்டியின் மடியில் போட்டுவிட்டு, நாவற் பழத்தை எடுத்து ருசிக்கலானாள். கூடவே புத்தகத்தையும் விரித்து படிக்கலானாள். பணங்கொடுத்து வாங்கினாலும் பாட்டியின் பேத்தியிவள். " என்னடி ஆ

எங்கே சென்றாய்...

எங்கே சென்றாய் எங்களை ஏங்கவைத்து நீ எங்கே சென்றாய்.... உண்ணும் வேளையிலும் உறங்கும் வேளையிலும் உன் குரலீட்டி சிந்தை திருப்புவாயே... இன்று நீ  எங்கே சென்றாய்... சின்னஞ்சிறு வயதில்,  மூன்றே மாதத்தில் முதிர்ந்த உன் பக்குவத்தின் முகத்தோற்றமும், குரலும் கேட்போர் உள்ளம் குலைநடுங்கும் இன்று கேட்போரால்  என் குலை நடுங்குகிறதே... நீ எங்கே சென்றாய் ... காலையில் கண்டாலும்  நான் வெளிசென்று வந்தாலும் காலை வருடி செல்லமாய் நீ கடிக்கும் போதிலே கடுஞ்சொல் வீசுவேன் உன்மேல்..! ஒருபோதும் கரம் வீசுவேன் இல்லையே இருந்தும் நீ எங்கே சென்றாய்... நம்வீட்டு கோழியோடும் விளையாடும் உன்தோழிப் பூனையோடும் வம்பிடும் உன்னோடு நான் வழக்கிட்டு வந்தாலும் நீ விருந்துண்ண மறுப்பதில்லை... என்றபோதும்  இன்று நீ எங்கே சென்றாய்...? உன்நிலை கண்டபோது என்பிள்ளை கொண்டநிலை ஐயகோ....  நான் என்சொல்லி  தேற்றுவதென்று தெரியாது... கலங்குமென் கண்ணீரும் துடைத்தேன் அழுகுமென் மகளறியாது உனக்கோர் பேருவைக்க என்போல் என்மகளும் ஆயிரம் பேரைச்சொல்லி அல்லும்பகலும் அதுசரியோ இதுசரியோ என்றவள்  எண்ணியெண்ணி அகமகிழ்ந்தாள் உனக்கும் பேருவைக்க அன்று நான் நின்ற நிலையும்

நூல்

காட்சிக்கு வெறுமொரு காகிதக் கட்டு பக்கம் புரட்டினால் அதிரும் அதிர் வேட்டு . . .! சி.செ