புறப்படு நீ

வில் நின்று 
புறப்படும் அம்பு 

காற்றோடு கை குலுக்கி
கன்னல் மொழிபேசி

இலையோடு நிழலாடும்
கிளையோடு உறவாடி

வந்ததை  மறந்து 
செல்லும் வேலையும் துறந்து

நாளை 
இலக்கை அடைவோம் என்று
இருந்திடக் கூடுமா...

இருந்தால் அதுவும்
வில்லின் 
குணத்தில் சேருமா...?

Comments

Popular posts from this blog

சித்திரம் பேசுதடிக் கண்ணமா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .