நீ எட்டுவைத்த நடையழகில் - பின் காலில் கண்பட்டுத்தெறித்த இதயத்துகளை தேடுகின்றேன் அது தொலைந்தயிடம் தெரியாமல் . . . . . . தும்பை செடிமேலே தொட்டு தொட்டு எழிலாடும் தும்பி கரம்போல், அன்பும் இடமாறும் இனிய வார்த்தை பரிமாறும் அழகே உன் காதலாலதுவும் இனிதே நடந்தேறும் . . . . . . எள்ளின் வாசத்தில் நாசி துளைக்கும் சாரமாய் நீ பேசிய மொழிகேட்டு விழியோடு செவிகளும் வழியடைத்து நிற்கும் என்னுள்ளத்தின் அன்பும் வரும் வழிமறந்திருக்குமடி. . . உன்னோடு பேசினால் உலகும் மறந்துபோகும் உள்ளத்தின் சுமையும் வெகுவாகக் குறைந்துபோகும் நோய் தீர்க்கும் மகளே உன் வார்த்தையே பெரும் மருந்தோ என்று. . . ஆய்வு செய்வோம். . . . . நீ தலைகுளிக்கும் போது, என்னை கண்ட அவதியில் அள்ளிச் சொருகினாய் நீ அடுத்த கணமே அவிழ்ந்ததடி அதுவும் ஆஹா. . . . அவிழ்ந்த இடத்திலிருந்து சொட்டும் தேன்துளியென நீர்த்துளி உன் கூந்தல் நுனியில் இருந்து தொலைபேசியில் உரையாடிய படி தொடும் தூரத்தில் நானிருந்து கேட்பேன் வரவா என்று. . . மேலும் கீழும் மூச்சிறைக்க மெல்லிய புன்னகை இதழ்முட்ட அய்யோ வேண்டாம் என்பாய் வெட்கத்தில் . . . . நானோ. . . உன் மூச்சிக்காற்றில்
Comments
Post a Comment