நீ எட்டுவைத்த நடையழகில் - பின் காலில் கண்பட்டுத்தெறித்த இதயத்துகளை தேடுகின்றேன் அது தொலைந்தயிடம் தெரியாமல் . . . . . . தும்பை செடிமேலே தொட்டு தொட்டு எழிலாடும் தும்பி கரம்போல், அன்பும் இடமாறும் இனிய வார்த்தை பரிமாறும் அழகே உன் காதலாலதுவும் இனிதே நடந்தேறும் . . . . . . எள்ளின் வாசத்தில் நாசி துளைக்கும் சாரமாய் நீ பேசிய மொழிகேட்டு விழியோடு செவிகளும் வழியடைத்து நிற்கும் என்னுள்ளத்தின் அன்பும் வரும் வழிமறந்திருக்குமடி. . . உன்னோடு பேசினால் உலகும் மறந்துபோகும் உள்ளத்தின் சுமையும் வெகுவாகக் குறைந்துபோகும் நோய் தீர்க்கும் மகளே உன் வார்த்தையே பெரும் மருந்தோ என்று. . . ஆய்வு செய்வோம். . . . . நீ தலைகுளிக்கும் போது, என்னை கண்ட அவதியில் அள்ளிச் சொருகினாய் நீ அடுத்த கணமே அவிழ்ந்ததடி அதுவும் ஆஹா. . . . அவிழ்ந்த இடத்திலிருந்து சொட்டும் தேன்துளியென நீர்த்துளி உன் கூந்தல் நுனியில் இருந்து தொலைபேசியில் உரையாடிய படி தொடும் தூரத்தில் நானிருந்து கேட்பேன் வரவா என்று. . . மேலும் கீழும் மூச்சிறைக்க மெல்லிய புன்னகை இதழ்முட்ட அய்யோ வேண்டாம் என்பாய் வெட்கத்தில் . . . . நானோ. . . உன் மூச்சிக்காற்றில்
காய்கறி கடையில் காய் பார்த்து வாங்கியதைவிட கரிசம் காட்டினாய் அதை நறுக்குவதில் கோழிக்குருமா குரும்பாட்டுக் குழம்பு நாக்கு சொட்டாங்கிப் போடும் தாயே போதுமென்றாலும் விடுவதில்லை நீ நல்லா சாப்பிடுப்பா இன்னும் ஒருவருடமோ ரெண்டு வருடமோ. . . என்றவள் குழம்பு கலக்குவதிலேயே மெய் மறப்பாள் வேதனையோடு முகந்துடைப்பாள் கேட்டதும் அடுத்த கவளம் அன்னம் உள்ளிறங்க மறுக்கும் தொண்டையில் வலிக்கவே நிற்கும் அன்றையப் பொழுது ஒவ்வொரு வீடாகப் பயணம் சொல்லும் படலமாக என் பிள்ளைகளோடு சிறு பிள்ளைபோல் நானும் குதூகலத்துடன் வீட்டுக்கு வீடு தண்ணீர் உண்ணும் உணவிலும் ஒருபிடியன்னம் விபூதியோடு கைப்பணமும் கண்ணீரோடு பயணப்படுத்துவார் பிரிய மனமின்றி சிரிப்பதா அழுவதா என்று தெரியாமலே பரிதவித்தேன் அன்று அதிகாலை 4.30 மணி விமான நிலையம் புதுமையிலும் புதுமை எனக்கது புது அனுபவம் குளு குளு அறையும் அரைகுறை தெளிவும் பார்வைக்கழகோ அழகு வீட்டு நினைவுகள் மெல்ல மறக்க நினைத்தாலும் பிறைபோல் அது வளர்வதும் தேய்வதுமே வனப்பாயிருக்கும் பேசத் தொரியாதவனை மூடு வாயையென்றதும் சிலபல நேரங்களில் ஓர் மூளையில் நின்று என்னைப் பார்த்து ஏளனம் செய்யுமென் மனசாட்சியு
வருடம் தோரும் உன் வரவை என் வீட்டு வாசலில் நின்று எதிர்பார்ப்பேன் சிறு புன்னகை வேண்டி தவமிருப்பேன் நிமிராத நடையோடு நிழல் கூட குலுங்காது நீ போகும் அழகை பார்த்திருப்பேன் என் கண்ணொளி மங்கும்வரை காத்திருப்பேன் கோதையே என் தேவதையே குழாய் நீர் பிடிக்க குழுமியோர் சண்டையிட குயில்போல், நீ இருக்குமிடம் தெரியாது உன் சிலம்பொலியும் சிரிக்காது உன் குரல் கேட்க தவமிருப்பேன் தினமும் நான் தவித்திருப்பேன் நினைவு கொண்ட நாள்முதல் நினையெண்ணும் உள்ளத்துள் நித்தமும் போராட்டம் உனக்கு நரைவிழுந்த பின்னும் நரைக்க வில்லை என் காதல் பூந்தோட்டம் உங்கூட்டு பெண்களெல்லாம் புது வாழ்வு கொண்டபோதும் எது காரணம் கொண்டோ கரம் நீட்ட மறுக்கின்றாய் மணம் முடிக்க வெறுக்கின்றாய் பள்ளி பருவத்திலும் - நீ தள்ளியே தானிருப்பாய் பேச்சு வரவில்லையே என்று கல்வியாசான் குமுறியபோது பரிதாபம் வேண்டாமென்று பதரி நீயழுததும் பாவி நெஞ்சில் பதிந்தத் தடம் மாறவில்லை உனை எண்ணிய நெஞ்சுள் ஏக்கம் தாழவில்லை என்னவளே இப்போதேனும் ஒரு ஆக்ஞை செய் பிரக்ஞை அற்ற என்நெஞ்சை பிழைக்கச் செய் நீர் நிறைத்த குடத்தோடு என் வீட்டு திண்ணைவரை ஒதுங்கச் செய்த இயற்கைக்கோர் நன்
Comments
Post a Comment