பெரியார்

நேற்று வரை
உருவில்லா தொன்றை
உலகம்
உண்மை யென்று நம்பியபோது

அதை,
இல்லை என்று
அறுதிட்டு கூறியவர் - நெஞ்சில்
உறுதிபடக் கூறியவர்

பழைமை வாதியின் 
புகழ் வாக்கின் - பொய்மையை
புதுமை நோக்கினூடே
புரிவை கொடுத்தவர்

அடுத்தவர் உரிமைக்கு
உயிர் கொடுத்தவர்

அடுத்தவர் வாழ்க்கைக்கும்
தோள் கொடுத்தவர்

அடிமை தனத்தை மட்டும்
துணிந்து எதிர்த்தார் 

அவர்...
ஓர் தலைகீழ் மாற்றத்தின்
புரட்சியாளன்

தெற்காசியாவின் 
சாக்ரடீஸ்

எங்கள் தந்தை பெரியாரின்
பிறந்த தினம் இன்று

இது, 
மானுடம் மகத்துவம்
உணர்ந்த தினம் என்பேன்

வர்ண பேதத்தையும்
தீண்டாமை தனத்தையும்
வேரறுத்தத் தினமென்பேன்

இது
நீதியின் பிறந்த தினம்
பெரியாரின் பிறந்ததினம்

வாழ்க அவர் புகழ்
வாழ்க புரட்சி தீ

செருவாவிடுதி :
சி.செ

Comments

Popular posts from this blog

சித்திரம் பேசுதடிக் கண்ணமா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .