நிதானம்

உடல்கொண்ட உயிர்
இடம் விட்டுப் பிரிகையில்

உறவென்றாலும்
உற்ற நட்பென்றாலும்
உள்ளம் துடி துடித்தழுகிறது...

தூரமோ பெருந் துயரமும்
நெஞ்சுருகும் ஓர் செய்தியும்

அஞ்சாத வேள்வியாய் வந்து
நெஞ்சை,
இயல்போடு இம்சிக்கும்...

இயற்கையும் என்ன பஞ்சம் ...!
அதுவும் சிலநேரம்
பேரிடி மின்னலை நெஞ்சில் 
சிறு துறும்பென்றே இறக்கும்  ...!!

செய்யும் பாட்டில் பிழையென்றால்
திருத்தம் செய்யலாம்

கொண்ட வாழ்வில் பிறழ்வென்றால்
திரும்ப முடியுமா

திரும்பவும் யோசிப்போம்
நிதானம் அதை சுவாசிப்போம்


சி.செ

Comments

Popular posts from this blog

சித்திரம் பேசுதடிக் கண்ணமா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .