உறவின் சுகம்!

வார்த்தை 
ஒலியின் வேகத்தை விட,
அதிவேகதையில் ஓடும், 

புத்தன் உறவின்முறையில்
சிலர் தொட்டும் தொடாமலும்
விரல் பட்டும் படாமலும்

வேசமில்லா தொரு
வார்த்தையை விதைப்பதில்
மனம் கூத்தாடி 
களிப்பதும் உண்டு...

சோர்ந்தால்!
தோள் சாய்த்து 
தேற்றுவதும் உண்டு

இதுதான் உறவு!

சூறையில் அகப்பட்ட
சோலையின் பிடியில்
கொடியாடிடும் முல்லை தளிராய்

உறவை தாண்டியும் சிலர்
உண்மையின் 
உள்ளிருந்தோ புறமிருந்தோ

அண்ணனென்பார்,
மனந் தளராதிருக்க
தம்பி யென்பார்

கொடும் பகை தடுக்குமென்
மாமனென்பார், 
மறுகனமே மைத்துனன் என்பார்

ஆயினும் நாமவர்
உறவின் முறைக்குள் 

கரங்கூட நீட்டவோ மடக்கவோ
தகுதி இல்லாதவன்
என்பதை உணர்வோம்

இதுதான் உண்மை!
இதை யுணர்ந்ததென் மெய்! 
இது மெய்!!

செருவாவிடுதி :
சி.செ

Comments

Popular posts from this blog

சித்திரம் பேசுதடிக் கண்ணமா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .