கிள்ளைமொழி பேசும்பிள்ளைக்கொரு பாட்டு....

அறிவை தேட 
அன்பே ஓடிவா - 

வெண்மை 
மலரின் இதயம் 
கொண்டிடும் பிறையே .... (அறிவை)

விண்ணில் தெரியும்
விண்மீனெல்லாம் 
கண்டு அறியும்
கலையை நாடி.......   

நூலோர் சொன்ன
நுட்பங்கள் கேட்டு
நூற்பல கோடி
கற்றிட வேண்டி........    (அறிவை)

வள்ளுவன் வாக்கை 
நெஞ்சில் இருத்தி
அறத்தின் வழியில்
விலகாதிருந்தும் ........    

அன்பெனும் ஆயுதம் 
ஒன்றே உலகில் 
அனைவரும் ஏந்தும் 
மந்திரம் ஆக்கிட .....    (அறிவை)

செருவாவிடுதி
செந்தில் சுலோ

Comments

Popular posts from this blog

மகாத்மா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .