நான் வரைந்த ஓவியத்தில் மின்னும் உன் புன்னகை சொல்லு(ம்)மோ விடுதலை சுகத்தின் சுகம் இன்றும் அறியாதார் கோடி கோடி என்று அடியேன் வணங்குவேன் என்றும் உனை நாடி நாடி என்பேன் அன்பெனும் ஆயுதமேந்தி அகிம்சையை முன்னிருத்தி அகிலத்தில் இதையும் முன்னெடுத்து அறத்தின் வலிமையோடு வாங்கிய சுதந்திரம் அதுவின்று சிலரின் சுகம்பேணும் அரிதாரம் என்றானது மாத்திரம் இனியேனும் உன் எண்ணம் மின்னுமா இல்லை அதன் எதிர்திசை ஒளிருமா எல்லோருக்கும் விடுதலை என்றெண்ணும் உன்போல் எண்ணம் இனியேனும் மண்ணகம் பூக்குமா மக்கள் நலம் பேனுமா என்ற கேள்வியோடு நித்தம் என் பயணம் வாழ்க நின் புகழ் என்றே வணங்குவேன் என்றும் சி.செ செருவாவிடுதி
காய்கறி கடையில் காய் பார்த்து வாங்கியதைவிட கரிசம் காட்டினாய் அதை நறுக்குவதில் கோழிக்குருமா குரும்பாட்டுக் குழம்பு நாக்கு சொட்டாங்கிப் போடும் தாயே போதுமென்றாலும் விடுவதில்லை நீ நல்லா சாப்பிடுப்பா இன்னும் ஒருவருடமோ ரெண்டு வருடமோ. . . என்றவள் குழம்பு கலக்குவதிலேயே மெய் மறப்பாள் வேதனையோடு முகந்துடைப்பாள் கேட்டதும் அடுத்த கவளம் அன்னம் உள்ளிறங்க மறுக்கும் தொண்டையில் வலிக்கவே நிற்கும் அன்றையப் பொழுது ஒவ்வொரு வீடாகப் பயணம் சொல்லும் படலமாக என் பிள்ளைகளோடு சிறு பிள்ளைபோல் நானும் குதூகலத்துடன் வீட்டுக்கு வீடு தண்ணீர் உண்ணும் உணவிலும் ஒருபிடியன்னம் விபூதியோடு கைப்பணமும் கண்ணீரோடு பயணப்படுத்துவார் பிரிய மனமின்றி சிரிப்பதா அழுவதா என்று தெரியாமலே பரிதவித்தேன் அன்று அதிகாலை 4.30 மணி விமான நிலையம் புதுமையிலும் புதுமை எனக்கது புது அனுபவம் குளு குளு அறையும் அரைகுறை தெளிவும் பார்வைக்கழகோ அழகு வீட்டு நினைவுகள் மெல்ல மறக்க நினைத்தாலும் பிறைபோல் அது வளர்வதும் தேய்வதுமே வனப்பாயிருக்கும் பேசத் தொரியாதவனை மூடு வாயையென்றதும் சிலபல நேரங்களில் ஓர் மூளையில் நின்று என்னைப் பார்த்து ஏளனம் செய்யுமென் மனசாட்சியு
வருடம் தோரும் உன் வரவை என் வீட்டு வாசலில் நின்று எதிர்பார்ப்பேன் சிறு புன்னகை வேண்டி தவமிருப்பேன் நிமிராத நடையோடு நிழல் கூட குலுங்காது நீ போகும் அழகை பார்த்திருப்பேன் என் கண்ணொளி மங்கும்வரை காத்திருப்பேன் கோதையே என் தேவதையே குழாய் நீர் பிடிக்க குழுமியோர் சண்டையிட குயில்போல், நீ இருக்குமிடம் தெரியாது உன் சிலம்பொலியும் சிரிக்காது உன் குரல் கேட்க தவமிருப்பேன் தினமும் நான் தவித்திருப்பேன் நினைவு கொண்ட நாள்முதல் நினையெண்ணும் உள்ளத்துள் நித்தமும் போராட்டம் உனக்கு நரைவிழுந்த பின்னும் நரைக்க வில்லை என் காதல் பூந்தோட்டம் உங்கூட்டு பெண்களெல்லாம் புது வாழ்வு கொண்டபோதும் எது காரணம் கொண்டோ கரம் நீட்ட மறுக்கின்றாய் மணம் முடிக்க வெறுக்கின்றாய் பள்ளி பருவத்திலும் - நீ தள்ளியே தானிருப்பாய் பேச்சு வரவில்லையே என்று கல்வியாசான் குமுறியபோது பரிதாபம் வேண்டாமென்று பதரி நீயழுததும் பாவி நெஞ்சில் பதிந்தத் தடம் மாறவில்லை உனை எண்ணிய நெஞ்சுள் ஏக்கம் தாழவில்லை என்னவளே இப்போதேனும் ஒரு ஆக்ஞை செய் பிரக்ஞை அற்ற என்நெஞ்சை பிழைக்கச் செய் நீர் நிறைத்த குடத்தோடு என் வீட்டு திண்ணைவரை ஒதுங்கச் செய்த இயற்கைக்கோர் நன்
Comments
Post a Comment