நான் வீழ்வேனென்று நினைத்தாயோ

வாசம் நிறைந்த பூஞ்சோலை 
வண்ணத்தூரிகை பேசுமாஞ்சோலை-அதில் 

நேசம் பாடியோர் தேன்சிட்டும் 
நேற்று போனதிசை புரியவில்லை

புன்னகை தூவிய முகத்தில் - விட்டுப் போகையில் சற்றும் பொலிவில்லை

நித்தமும் பொல்லா துயரம்வரும் - அதில் நித்திரைகூட மறந்து விடும் - இருந்தும்

காரணம் ஏதும்சொல்லிலில்லை-யார்க்கும் 
காதோரம் சொன்னதாய் நினைவுமில்லை

காய்த்துக் குலுங்கிய கனிவகைகள்-பறவை 
காணாது போனால் காம்பறுமோ

சாய்த்து விடுவோம் கனிமரத்தை-என்று பறவை நினைத்தால் பலனிருமோ 

தேய்ந்து தேய்ந்து போனாலும் - நிலவு தேய்வதில்லை என்ப தறிவோம்

சாய்ந்து சாய்ந்து வீழ்ந்தாலும்-நாணல் சளைப்பதில்லை என்பதறிக

நாம் போனால் 
நானிலம் அழிந்துவிடும்- என்று
நினைத்தால் உன்போல் மூடனில்லை

சி.செ

Comments

Popular posts from this blog

மகாத்மா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .