தூரிகை

சாலையோர மதில் 
சுவரில்

சாயம் போன 
மனதோடு

சான்றுரைத்தார், 
ஓவியச் சான்று

பச்சை இலையும்
கரித்துண்டும் 
கையில் கொண்டு

எழில் 
மிஞ்சுமோர் 

ஓவியந் தீட்டியோர் 
ஊமையோ? 

பாதசாரி பலரும்
பரிவு வார்த்தை கேட்டும்

தன்னை மறந்து 
போவோரை . . . 

பார்த்தேங்கியது 
ஓர் தூரிகை
சாலையோரக் கடையிலிருந்து

செருவாவிடுதி :
சி.செ

Comments

Popular posts from this blog

மகாத்மா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .