நினைவுகள்

இயற்கை அரும்பிய பூக்களின் இதழ்களை  பார்த்ததுண்டு

பூவிதழ் விரித்த 
புன்னகை அரும்பிய முகம்
பார்த்து ஏங்கியதுமுண்டு

செடி மலர்ந்த பூவில்
தேன் அருந்தும் வண்டினம்
மயங்கி மோதிய நிலை கண்ட
நினைவுமுண்டு - அவ்வழி. . .

உயிர் கொடி சுமந்ததின்று
மடிதாங்கியப் பசுவின் கன்று
இறங்கியதா. . .  
இறக்கி வைத்ததா. . .  

குவலை போர்த்தியக் கன்று
துளி ரணத்தோடு யீன்று
காயமற்று காலூன்றி
நடைபயில முயலும்

குளிர்ந்த உடல்
நா துடைத்தே
சூடேற்றும் பசுவும்

கல்லுண்டான் போல்
காலிடறும் கன்றை
நா துடைத்தே நிறுத்தும்

ஈன்ற பசுவின் கடமை
என் கடந்தகாலத்தை மெல்லும்

உள்ளம் வேதனையில் சொல்லும்
தாயின் அருமை

செருவாவிடுதி :
சி.செ

Comments

Popular posts from this blog

மகாத்மா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .